தேசியக்கொடி ஏற்றுவதை தடுத்தால் சிறை தண்டனை..!! உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் அதிரடி உத்தரவு..!!
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியான “ஜி.ஜெயச்சந்திரன்” இன்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கும் முன், சுதந்திர தினத்தை யொட்டி காலை குடியிருப்பு நல சங்கத்தின் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் சிலர் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர போவதாகவும், அதை அவசர வழக்காக உடனே விசாரணை செய்ய வேண்டுமென வழக்கறிஞர் மேல்முறையீடு செய்துள்ளார்.
அப்போது, தேசிய கொடி ஏற்ற பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு நீதிபதி, ஜெயச்சந்திரன் பதில் அளித்துள்ளார் அதாவது “சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கலாம்” என உத்தரவிட்டுள்ளார்..
தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் எனவும், கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது. தடுப்போர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.