அண்ணமாலை மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அடுத்த நடவடிக்கை இது தான்..! முன்னாள் டி.எஸ்.பி அனுசுயா பேட்டி..!
ராஜீவ்காந்தி கொலையின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட முன்னாள் டி.எஸ்.பி அனுஸ்யா பேட்டி அளித்துள்ளார்.. அதில் அவர் பேசியதாவது..
“பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குறித்து குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை ரவுடி என கூறுவதற்கு அண்ணாமலையிடம் என்ன ஆதாரம் உள்ளது.
3 முறை தேர்தலில் போட்டியிட்டவர் செல்வப்பெருந்தகை ரவுடி என்றால் மக்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுப்பார்களா..? கட்சி மேலிடம் பதவி கொடுக்குமா..? தேசிய கட்சியின் தலைவரையே ரவுடி என கூறுவது சரியா..?
கொலைகாரர்கள், கோத்ரா ரயில் எரிப்பில் ஈடுபட்டவர்கள், ஆயிரக்கணக்கான மக்களை கொண்டவர்கள் பாஜகவில் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உள்ளர் கூட பாஜகவில் இருந்தவர் என் காவல்துறையினர் கூறுகின்றனர்.
எந்தவித ஆதாரமுமின்றி எந்த அடிப்படையில் அண்ணாமலை செல்வப்பெருந்தகை மீது குற்றச்சாடுகளை முன் வைக்கிறார். செல்வபெருந்தகை குறித்து அவதூறாக பேசியதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்.
அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால்.., டிஜிபி மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடன் அண்ணாமலை மீது புகார் அளிக்கவுள்ளோம்.
– லோகேஸ்வரி.வெ