பணியில் குடித்துவிட்டு கோயில் திருவிழாவில் நடனமாடியதற்காக இடுக்கியைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இடுக்கி சந்தானபாறை ஏ.எஸ்.ஐ. கே.பி.ஷாஜியை மாவட்ட காவல்துறைத் தலைவர் பணி இடைநீக்கம் செய்துள்ளார். நேற்றிரவு பூப்பாறை கோவிலில் திருவிழாவின் போது “கரகாட்டக்காரன்” படத்தில் இடம் பிடித்திருந்த “மாரியம்மா… மாரியம்மா…” பாடலுக்கு நடனமாடினார். இதுதொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியான நிலையில், கேரள காவலர் பக்தி பரவசத்தில் தமிழ் பாடலுக்கு நடனமாடுவதாக கருதப்பட்டது.
ஆனால் உண்மை என்னவெனில், ஏஎஸ்ஐ ஷாஜி நேற்று கோவில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு சென்றுள்ளார். அப்போது குடித்திருந்த காவலர், போதையில் நடனமாடியது தெரியவந்துள்ளது. இதனால் பணியின் போது குடித்துவிட்டு நடனமாடிய காரணத்திற்காக இடுக்கி சந்தானபாறை ஏ.எஸ்.ஐ. கே.பி.ஷாஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.