இடியமின்னின் அடுத்த அப்டேட்.., எந்த மாவட்டங்களுக்கு கனமழை தெரியுமா..?
தமிழ்நாட்டில் இன்று முதல் இன்னும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, நீலகிரி, கோவை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம், மற்றும் புதுச்சேரியில் செப்டம்பர் 1ஆம் தேதி வரை லேசான மழை முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்கும் படி கேட்டு கொண்டுள்ளனர்.
Discussion about this post