“சம உரிமை கிடைக்க பாடுபடுவேன்..” தவெக உறுதிமொழி..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தற்போது தொடங்கியுள்ளது..
5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.. இன்று காலை முதல் மாநாடு திடலில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்..
அவர்களை உற்சாக படுத்தும் விதமாக முன்னதாக கிராமிய இசைகள் இசைக்கப்பட்டது..
அதன் பின்னர் கட்சிக்கொடி பாடலுடன் மாநாடு தொடங்கியது முன்னதாக பாரதியார், காமராசர், முத்துராமலிங்க தேவர், உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தலைவர் விஜய் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்..
அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது., அதனை தொடர்ந்து கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் வெங்கட்ராமன் வாசிக்க தவெக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்..
“பிறப்பிக்கும் எல்லாம் உயிருக்கும் என தொடங்கிய உறுதிமொழி… சம உரிமை கிடைக்க பாடுபடுவேன், சமூக நீதி பாதையில் பயணிப்போம் என உறுதிமொழி” ஏற்றனர்..