கணவன் மனைவி சண்டை.. இளம் பெண் எடுத்த விபரீத முடிவு..!
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் பிரதீபன் இவரது மனைவி ஓமனா. இவர்களுக்கு 25 வயதில் அஸ்வினி என்ற ஒரு மகள் உள்ளார். இவருக்கும் கப்பாட் பெரிங்கரைப் பகுதியை சேர்ந்த விபின் என்ற நபருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இதனிடையே கணவன் மனைவி இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவதன்று கணவன் மனைவிக்கு இடையே கடும் வாக்ககுவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த விபின் அஸ்வினியை தாக்கியுள்ளார்.
இதில் அஸ்வினிக்கு காதில் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கணவனிடம் கோபித்துக் கொண்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
கடந்த ஜூலை 15ஆம் தேதி விபினின் சகோதரி திருமணம் நடந்த நிலையில் அஸ்வினி அதில் கலந்து கொண்டு விட்டு தாய் வீட்டுக்கு திரும்பினார். இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 16ஆம் தேதி தூங்குவதாக தனது அறைக்கு சென்ற அவர் மறுநாள் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை தட்டிப் பார்த்தபோது கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர்.
அப்போது அஸ்வினி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அஸ்வினி உயிர் இழந்தார். இது தொடர்பாக அஸ்வினியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் தன்னுடைய மகளை விபின் மற்றும் அவரது குடும்பத்தினர் சித்திரவதை செய்து வந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபின் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்