சூடு பிடித்த கொடநாடு கொலை கொள்ளை வழக்கு..!! பீதியில் யார்..?
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஐயப்பனிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடநாடு வழக்கு விசாரணை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வரும் நிலையில், தற்போது இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்..
இதுவரை 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ள காவல்துறை அண்மையில் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவரான ஐயப்பனிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி காவல்துறை முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மனும் அனுப்பப்பட்டது.
அதன்படி இன்று கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஐயப்பன் ஆஜரானார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரி முருகவேல் தலைமையிலான காவல்துறை விசாரணை நடத்தினர். அவரிடம் கொடநாடு பங்களா குறித்து, பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..