கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், மாசி மாதம் கொடை விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கமாகும். இக்கோவிலின் சிறப்பம்சம் என்னவெனில் 15 அடி உயரத்தில் புற்று ஒன்று அமைந்துள்ளது. இந்த புற்றின் மேல் பகுதியில் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கொடை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 14ம் தேதி அன்று வெகு விமர்சையாக நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் ஆண்டுதோறும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வது வழக்கம்.
மாவட்டத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற மார்ச் 14ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக மே மாதம் 13ம் தேதி அன்று வேலை நாளாக செயல்படும் என தெரிவித்துள்ளார்.