வீரபாண்டிய கட்டபொம்மன் மறைந்தாலும் அவருடைய வீரம் செறிந்த தியாக வரலாறு மறையவில்லை என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்
ஆங்கிலேயே ஆதிக்கத்தை எதிர்த்து போராடிய தமிழ் மன்னர்களில் ஒருவரான பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ மற்றும் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்த்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, விடுதலைப் போராட்டத்திற்குவித்திட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரமும் போராட்டமும் வீர மரணமும் பின் நாட்களில் புரட்சியாளர்களுக்கும் விடுதலை போராட்ட வீரர்களுக்கும் ஒரு உத்வேகமாக அமைந்ததாக தெர்வித்தார்