உயர்ந்தது மின் கட்டணம்..!! உடைந்து போன மக்கள்..!!
தமிழகத்தில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம்.., மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மட்டுமே உள்ளது. மின் வாரியத்தில் நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால். மின்சாரவாரியத்தின் கோரிக்கையை ஏற்று, எட்டு ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் மாதம் 2022ம் தேதி 10% முதல் 30% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அடுத்த 4 ஆண்டுகளுக்கு 6% வரை கட்டணம் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை தொடர்ந்து விவசாயி களுக்கும், குடிசை வீடு வைத்து இருப்பவர்களுக்கும் இலவச மின்சாரமும், கட்டிட மற்றும் ஓட்டு வீடு வைத்து இருப்பவர்களுக்கு எந்த வித கட்டண உயர்வும் கிடையாது.
வணிகம் மற்றும் சுய தொழில் வைத்து இருப்பவர்களுக்கு ஒரு யூனிட்டிற்கு 13 காசு முதல் 21 காசு வரை மின்கட்டணம் உயரும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
இன்று முதல் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு 6.90 ரூபாய், வணிக நிறுவனங்களுக்கு 8.70 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு குறித்து மின்சார வாரிய துறைக்கு அதிகாரி ஒருவர் இலவச மின்சாரம் மற்றும் மின்சார மானிய விலைக்கான செலவை சரி செய்ய, மின்சார வாரியத்திற்கு அரசு மானியம் வழங்குகிறது. இதற்கான ஒப்புதல் கடிதம் ஒன்றை மின்சார வாரியாதிற்கு அனுப்பியுள்ளது என்று அவர் கூறினார்.