கனமழை எச்சரிக்கை..!! ஆரஞ்சு அலார்ட் விடப்பட்ட பகுதிகள்..!! உஷார் மக்களே..!!
நேற்று காலை முதல் சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது…
தமிழத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நவம்பர் 5ம் தேதி முதல் பருவமழை தீவிரமடையும் எனவும் இன்றும் நாளையும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது…
கனமழை எச்சரிக்கை :
தமிழகத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவியுள்ள நிலையில் சென்னை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று இரவு முதல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலார்ட் :
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..