ஆர்டிஓ பணியில் உள்ளதாக கூறி, 1 கோடி ரூபாய் வரை பண மோசடி…
திருப்பூரில், ஆர்டிஓ பணியில் உள்ளதாக கூறி, 1 கோடி ரூபாய் வரை பண மோசடி செய்த தம்பதியரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூரை சேர்ந்த கவிதா என்ற பெண் பொதுமக்களிடம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அலுவலகத்தில் ஆர்டிஓ ஆக வேலை செய்து வருவதாகவும், தமிழ்நாடு அரசின் குடிசை மாற்று வாரிய திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகளில், வீடு ஒதுக்கும் பணியில் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கும் வேலை செய்து வருவதாகவும், போலி அடையாள அட்டையை காண்பித்து வீடுகள் வாங்கி தருவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி 1 கோடி ரூபாய் வரை ஏமாற்றியள்ளார்.
இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கவிதா மற்றும் ராஜ்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.