சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாகன பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த முகாம்
தருமபுரியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தீயணைப்புத் துறை மற்றும் போக்குவரத்து சார்பில் வாகன பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த செயல்விளக்க முகாம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தனியார் பள்ளி ஓட்டுனர்களுக்கு வாகன பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த செயல்விளக்க முகாம், மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் வெங்குடுசாமி மற்றும் தீயணைப்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கலந்துகொண்டு சாலை விதிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பேசினார்.
இதில் சாலை விதிமுறைகளை எவ்வாறு பின்பற்றுவது, பேருந்துகளில் பயணம் செய்யும்போது படிக்கட்டில் நின்றபடி செல்லாமல் பாதுகாப்புடன் மாணவர்கள் பயணிப்பது குறித்து பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.