ஸ்கூல் லீவுக்கு வெளியூர் போயிருக்கீங்களா? உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி..!
பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பின்படி வரும் 10-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் விடுமுறைக்காக தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து சென்ற மக்கள் சென்னை திரும்புவதற்கு ஏற்ப அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மக்கள் சென்னை திரும்புவதற்கேற்ப வரும் 9ம் தேதி 705 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இதேபோல், மற்ற பகுதிகளில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் 8,9 தேதிகள் வார இறுதி நாட்கள் என்பதால்
சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே இந்த கூட்டநெரிச்சலை கட்டுபடுத்துவதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்ய பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை,திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களுக்கு ஜூன் 7,8 தேதிகளில் 1,105 பேருந்துகளும்
சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய ஊர்களுக்கு 160 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.
இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் முலம் ஜூன் 7,8,9 தேதிகளில் பயணிக்க இதுவரை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்படித்தக்கது.
-பவானிகார்த்திக்