பயங்கர கண்காணிப்புடன் துவங்கிய குரூப் 1 தேர்வு..
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணி தொகுதி (குரூப்-`I) தேர்வில் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை மற்றும் ஆற்காடு ஆகிய இரண்டு இடங்களில் மொத்தம் 10 தேர்வுக்கூடங்களில் 2,654 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இத்தேர்வுக்காக கூடுதல் சிறப்பு பேருந்து வசதிகள், தடையில்லா மின்சாரம், காவல்துறை பாதுகாப்பு மற்றும் இதர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது..
இந்த நிலையில் தேர்வு நடைபெறும் மையங்களை கண்காணித்திட இரண்டு வட்டத்திற்கும் ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்பட்டு தொடர்ந்து வினாத்தாள்களை கருவூலத்தில் பாதுகாப்பாக வைப்பது, எடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைத்திட 2 வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய்த்துறையிலிருந்து பறக்கும் படை அலுவலர்களாக 10 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுற்றுக்குழு (Mobile Team) 2 வருவாய்த் துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது..
அதன் ஒரு பகுதியாக வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் நெமிலி அடுத்த மேலேறி பகுதியை சேர்ந்த அசோக்குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி நிறைமாத கர்ப்பிணியானவரை பத்திரமாக தேர்வு மையத்திற்கு அழைத்து வந்து இருவரும் தேர்வு எழுதி சென்றனர்.
-பவானி கார்த்திக்