சென்னையில் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று தடாலடியாக உயர்ந்துள்ள நகை வாங்க காத்திருப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 5,190 ரூபாயாகவும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 41,520 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 35 ரூபாய் அதிகரித்து 5,552 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்து 44,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போல் இல்லாமல் வெள்ளி விலை குறைந்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு 10 காசுகள் குறைந்து 67 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் குறைந்து 67 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால் டாலரின் மதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் மீது திரும்பியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாக சரிந்து தங்கத்தின் விலை இன்று ஒரே அடியாய் உயர்ந்துள்ளது.