கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட நான்கு பேர்… ரகசிய தகவலின் படி அலேக்காக கைது செய்த போலீசார்..!
தருமபுரி மாவட்டம் தொப்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சிவாடி ரயில் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக தொப்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில் நேற்று தொப்பூர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் சிறப்பு காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இரு இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரும் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த பையை பரிசோதனை செய்தபோது அவர்களிடம் இருந்து சுமார் 400 கிராம் கஞ்சா வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
அதன் அடிப்படையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிவாடி பகுதியை சேர்ந்தவர்கள் சிவா(22) மற்றும் வசந்த்(21), கெட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த நந்தகுமார் (20), அனுமந்தன் நகரை சேர்ந்த தினேஷ் (24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, 400 கிராம் கஞ்சாவை தொப்பூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
-பவானி கார்த்திக்