உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்க்கு நிதி உதவி வழங்கிய சக காவலர்கள்…
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றியவர் அருள் பிரபுதாஸ் (39). இவர் தமிழ்நாடு காவல்துறையில் 2009 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார்.
15 ஆண்டுகளாக காவலராக பணிபுரிந்துள்ள இவர் கடந்த 08.12.23 அன்று பணியில் இருந்த போது உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் இவரது பெற்றோரை அழைத்து அரவக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் ரூ. 20 லட்சத்தை பெற்றோர்கள் பெயரில் டெபாசிட் செய்தும், 5 லட்சம் ரூபாயை ரொக்கமாக கையில் கொடுத்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு காவல் துறை பணியில் சேர்ந்த 4787 காவலர்கள் ஒன்றிணைந்து அருள் பிரபுதாஸ் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அரவக்குறிச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இது போல பணியில் இருக்கும் போது உயிரிழந்த 25 பேருக்கு இது போல நிதி உதவி வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-பவானி கார்த்திக்