லாபமான விளையும் இல்லை, தண்ணீரும் இல்லை கைகளை சங்கிலியால் கட்டி விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 35வது நாளான இன்று கைகளை சங்கிலியால் கட்டி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாட்கள் கூலி, பிரதமர் பென்சன், முதியோர், ஊனமுற்றோர், விதவை உதவி தொகையை, வீடு கட்ட கொடுக்கும் பணத்தை வங்கிகள் விவசாய கடன் பாக்கிக்காக பிடிக்கக் கூடாது ,என்று மத்திய அரசு கூறிய பிறகும் பிடிக்கும் வங்கி மேலாளர்களை கைது செய்ய வேண்டும், 100 நாட்கள் வேலையாட்களை கோடை காலமான 4மாத காலத்தில் வேலை கொடுத்து விட்டு சாகுபடி காலமான 8மாதத்திற்கு விவசாய வேலை செய்ய அனுமதிப்பதுடன், சாகுபடி காலத்தில் 100 நாட்கள் வேலை கொடுத்து விவசாயத்தை அழிக்கக் கூடாது,
விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நெல்லுக்கு கிலோவுக்கு ரூ.54, கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.8100, வழங்க வேண்டும், காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாகண்ணு
உச்ச நீதிமன்றம் தமிழகத்திற்கு மாதா, மாதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கூறியும் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுக்கிறது, உச்ச நீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு மதிக்கவில்லை என்றால் மோடி அதற்கான உத்தரவு விட வேண்டும், ஆனால் அவரும் அதை கண்டு கொள்ளவில்லை,
லாபமான விலையும் தரவில்லை, தண்ணீரும் தரவில்லை, வங்கிகள் விவசாயிகளின் கழுத்தை நெரித்து வருகிறது. அதையும் கேட்பதாக தெரியவில்லை இதனை வெளிப்படுத்தும் வகையில் விவசாயிகளை அரசு கைகளை கட்டி போட்டு விட்டது என்பதை வெளிப்படுத்தும் விதமாக கைகளில் பூட்டு போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.
Discussion about this post