ரசிகரின் விதை பை.. காலால் மிதித்தே கொன்ற பிரபல கன்னட நடிகர்.. பகீர் தகவல்..
கன்னட சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தர்ஷன். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தை உள்ள நிலையில, பவித்ரா கவுடா என்ற நடிகையுடன், தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தர்ஷனின் முறை தவறிய உறவை அறிந்த ரேணுகா சாமி என்ற ரசிகர், பவித்ரா கவுடாவுக்கு ஆபாசமான முறையில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
ஒரு நாள் மட்டுமின்றி, தொடர்ந்து இவ்வாறு மெசேஜ் அனுப்பியதால், கடுப்பான பவித்ரா கவுடா, தர்ஷனிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதனை அறிந்த அவர், தனது ரசிகர் மன்ற தலைவரின் உதவியுடன், ரேணுகா சாமியை கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து, தர்ஷனும், அவரது காதலி பவித்ரா கவுடாவும், ரேணுகா சாமியை அடித்தே கொலை செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், காவல்துறையினர் தரப்பில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிகையில், ரேணுகா சாமி எவ்வாறு அடித்து சித்ரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
அதாவது, 39 இடங்களில், ரேணுகா சாமியின் உடலில் கொடூரமான காயங்கள் இருந்துள்ளது. மேலும், அவரது மார்பக எலும்புகள் உடைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கு மேலாக, மெஹர் என்ற கருவியின் மூலமாக, ரேணுகா சாமியின் ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது.
மேலும், அவரது விதை பைகள், காலால் அழுத்தி சித்ரவதை செய்யப்பட்டுள்ளது. இப்படி, பல்வேறு கொடூரமான முறைகளில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக, குற்றப்பத்திரிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.