தருமபுரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் சாலையில் மின் கம்பி ஒன்று அறுந்து கீழே விழுந்துள்ளது. இதையடுத்து காரிமங்கலத்தில் உள்ள சாலை வழியாக தாய் மற்றும் மகன் மற்றும் மேலும் ஒரு நபர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அறுந்து கிடந்த அந்த மின் கம்பியை தாய், மகன் மற்றும் அந்த நபர் என அடுத்தடுத்து மூவரும் தெரியாமல் மிதித்தனர். அப்போது மின்சாரம் தாக்கியதில் தாய், மகன் உள்பட மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இறந்த மூவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி அடுத்தடுத்து மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post