“அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர்..” தவெக தலைவர் விஜய் பதிவு..!!
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவராக இருப்பவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பிறந்தநாள் இன்று. இன்றைய நாளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது திருவுருவ சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்…
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்.. சமூக வலைத்தளங்களில் தனது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்..
அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர்.
சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்.