குறிப்பிட்ட வழிதடத்தில்.., நாளை மின்சார ரயில்கள் ரத்து..! அதிர்ச்சியில் பயணிகள்..!!
பராமரிப்பு பணி காரணமாக எழும்பூர் டூ விழுப்புரம் பிரிவில் செயின்ட் தாமஸ் பகுதியில் நாளை காலை முதல் மாலை வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது…
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன..
தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வரும் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது..
சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு மற்றும், சென்னை கடற்கரை டூ காஞ்சிபுரம், மற்றும் சென்னை கடற்கரை டூ கும்மிடிப்பூண்டி செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே தண்டவாளங்கள் பணி சீரமைப்பு செய்யப்பாடுவதால்.., பணிகள் முடிந்த பின்னரே ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.