கர்ப்ப காலத்திலும் நீங்கள் வேலை செய்கிறிர்களா? அது சரியா ! அதை சமாளிப்பது எப்படி ?
பொதுவாக முழு உடல் ஆரோக்கியமாக இருப்பவர்களே, காலை பணி சென்று மாலை வீடு திரும்பும் போது உடல் சோர்வாகி விடுவார்கள். அதுவும் கர்பிணி பெண்கள் என்றால்? ஒரு பக்கம் கர்பிணி பெண்களுக்கு வாந்தி,மயக்கம், உடல் சோர்வு என பல பிரச்னைகள் இருக்கும்.
வேலைக்கு சென்று வீடு திரும்பும் பொழுது இதை விட அதிகமாக உடல் சோர்வு ஏற்படும். அது மட்டுமின்றி வேலையினால் ஏற்படும் அழுத்தம் என பல உண்டு.
அந்த சூழலில் கர்பிணி பெண்கள் இதை அனைத்தையும் சமாளிக்க வேண்டியது , பெரும் சவாலாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் தாய்மையை பெரும் வரமாக கருதுவார்கள்.
அந்த கர்ப காலத்தில் மன அழுத்தம் இல்லாமல் வாழ வேண்டும். அதற்காக சில டிப்ஸ் இருக்கின்றன.
கர்பம் என்பது புனிதமான ஒன்று, அதை வெளியே தயக்கமின்றி சொல்லலாம். நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் கர்பம் என்று சொன்னால், வேலையில் இருந்து நீக்கி விடுவார்களோ என்று அச்சம் கொள்ளவேண்டாம்.
நீங்கள் இதை செய்தால், உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அலுவலகத்தினர் செய்து கொடுப்பார்கள். பணியின் நேரம் குறைக்கப்படும், குறிப்பாக வீட்டிலிருந்தே நீங்கள் வேலை பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.
அப்படி நீங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ இருந்து நீண்ட நேரம் வேலை பார்த்துக் கொண்டிருந்தால், உடல் பலவகையில் பாதிக்கப்படும். எனவே சிறிது சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளவது சிறந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நடக்க வேண்டும்.
நீங்கள் நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே இருப்பதால், குழந்தை ஒரே இடத்தில் அசைவின்றி இருக்கும். நடப்பதால் கருவில் உள்ள குழந்தைக்கு அசைவு கொடுக்கும்.
கடினமான வேலைகளை செய்வதை தவிர்க்க வேண்டும். தினமும் காலையில் எழுந்ததும் தியானம் செய்வது நல்லது. அது மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும். இதன் மூலம் மனஅழுத்தம் குறையும்.
உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். காரணம் திடீர் சோர்வு, மயக்கம் போன்றவை ஏற்படும். உடலில் நீர்ச்சத்து சேர தண்ணீர், மோர், இளநீர், பழங்கள் ஜூஸ் என குடிக்கலாம்.
இயற்கை குளிர் பானங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்கு வலுவை தரும். செயற்கை குளிர் பானத்தை தவிர்த்து விடலாம்.
எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்து விடலாம், இல்லையேல் தொடர் வாந்தி மயக்கம் ஏற்படும். உடல் சோர்வு ஏற்படும் சமயத்தில் ஆப்பிள் எடுத்துக்கொள்வது நல்லது.
கர்பகாலத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் நீண்ட பயணத்தை முடிந்த அளவிற்கு தவிர்த்து விடலாம்.