கோடை காலத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக பாம்புகள் வீட்டுக்குள் அடிக்கடி வருவது உண்டு. நாம் பார்த்தால், பாம்பாட்டிகளை கூப்பிட்டு பிடிப்போம். நாம் பார்க்காத நேரத்தில் பாம்பு வீட்டுக்குள் புகுந்தால் என்ன செய்வது? அதுவும் விஷப் பாம்பாக இருந்தால் உயிருக்கே ஆபத்தாகத்தானே முடியும்.
வீடு மற்றும் அதன் சுற்றுப்புறம் எவ்வளவு தூய்மையாக இருந்தாலும் ,வீட்டுக்குள் பாம்பு வருவதை தடுக்க முடியாது. தற்போது, ஏசி மெஷினுக்குள் இருந்தே பாம்புகள் பிடிக்கப்படும் சம்பங்கள் கூட நடகின்றன.
ஆனால், ஒரு சிம்பிள் விஷயத்தை செய்தால் வீடுகளுக்கும் பாம்பு வருவதை தடுத்து விடலாம். அதாவது, வீட்டை சுற்றிலும் ஆங்காங்கே சாமந்திப்பூ வளர்த்தால் போதுமானது. சாமந்திப் பூக்கள் வாசம் பாம்புகளுக்கு பிடிக்காது. மிகவும் அசவுகர்யாமாக பாம்புகள் உணரும். இதை , ஆராய்ச்சியாளர்களும் உறுதி செய்துள்ளனர். எனவே, இந்த முறையை செய்து பாருங்கள். பாம்பு பயமில்லாமல் வாழ முடியும்.