நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய 33 எம்.பி.க்கள் இடைநீக்கம்!!
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 33 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் நாடாளுமன்ற அவைக்குள் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டது பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிக்கை அளிக்க கோரி நாடாளுமன்ற மக்களவை இன்று காலை தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
கோஷங்களை எழுப்பியும், கைகளில் அட்டைகளை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை கண்டித்து, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அமைதியாக இருக்கும்படி கேட்டு கொண்டார். எனினும், தொடர்ந்து அவையில் உறுப்பினர்கள் அமளில் ஈடுபட்டனர்.
இதனால், அவை பிற்பகல் 2 மணிக்கும், பின்னர் 3 மணிக்கும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்பின்பு அவை கூடியபோது, தலைவர் ராஜேந்திர அகர்வால் தலைமையில் அவை நடந்தபோது, மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறி, 33 எம்.பி.க்களை சபாநாயகர் இடைநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன், சுமதி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதேபோல், நவாஸ்கனி, அண்ணாதுரை, கலாநிதி வீராசாமி, எஸ்.எஸ். பழனி மாணிக்கம் உள்ளிட்டோரும் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி.க்களான விஜய் வசந்த், திருநாவுக்கரசர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, கவுரவ் கோகாய் உள்ளிட்டோரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன் தி.மு.க. எம்.பி.க்கள் உள்பட 14 பேர் மக்களவையில் இடைநீக்கம் நிலையில், அதிகளவிலான உறுப்பினர்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.