தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் மணிமண்டபம்…புனரமைப்பதற்கான அறிவிப்பு வெளியீடு…!
ராணிப்பேட்டை மாவட்டம் பாலாற்றின் கரை அருகே தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் ஆகியோரின் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இந்த இடத்தை ராணிப்பேட்டையில் வரலாற்று நினைவு சின்னமாக மாற்றியமைத்து பொதுமக்களின் பார்வையிடமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று கடந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் பொதுப்பணித் துறையின் பட்ஜெட் அறிவிப்பில் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் அவர்களின் நினைவு மண்டபங்கள் புனரமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மாவட்ட ஆட்சியர் சந்திரகலா ஆகியோர் தேசிங்கு ராஜா மற்றும் ராணி பாய் ஆகியோரின் நினைவு மண்டபம் உள்ள இடத்தினை பார்வையிட்டு புனரமைப்பு பணிகள் மற்றும் பொழுதுபோக்கு தலம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு அதன் திட்ட வரைபடங்களை பார்வையிட்டனர் இதில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-பவானி கார்த்திக்