அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கு..!! தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவு..!!
தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு பதில் அளிக்கும் படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் கடை வீதியில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்., மறைந்த தலைவர் அண்ணா அவர்களை பற்றியும் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை பற்றி அவதூறாக பேசி பொய்யான கருத்துக்களை பதிவிட்டதாக கூறி அமைச்சர் சி.வி.சண்முகம் அவருக்கு எதிராக திமுக சார்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரணை செய்தார். அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் “ஜான் சத்யன்” சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது.. என திமுக நிர்வாகி அளித்த புகார் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் அதனை திமுக அரசு தான் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என கூறினார்..
அதற்கு எதிர்தரப்பில் பேசிய வழக்கறிஞர்., சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது.. அவரது பேச்சை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறியுள்ளார் அதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கூறினார். வேறு பிரிவு ஏதேனும் பொருந்தும் என்றால் அந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்வதாக கூறினார்.
அமைச்சர் சிவி சண்முகம் மீது ஏற்கனவே குற்றவழக்கு பதிவு செய்யபட்டிருந்த நிலையில் தற்போது அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மனு ஒன்றை அளித்துள்ளார்.. அதில் குறிப்பிட்டிருப்பதாவது “தன் மீது வேண்டுமென்ற அவதூறு வழக்கு பதிவிட்டிருப்பதால் அந்த வழக்கிற்கு தடை விதிக்கும் படி குறிபிட்டுள்ளார்..
நேற்று இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் இன்னும் இரண்டு வாரத்திற்குள் தமிழக அரசு., இந்த அவதூறு வழக்கிற்கு பதில் அளித்திருக்கும் படி உத்திரவிட்டார்..