சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
இதுவரை 2.42 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர் என்றும் 90.69 சதவீதம் நிறைவடைந்துள்ள மீதம் இருக்கக்கூடிய 9.31 விழுக்காடு பேர் நிலுவையில் உள்ளதால் பிப்ரவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதுவே இறுதிவாய்ப்பு என்று கூறிய அவர் நிலக்கரி மாயம் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது அவர்கள் மீது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.