இன்று மட்டும் 470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் குறையத்தொடங்கியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் நபர்களின் எண்ணிக்கை 3,640-யில் இருந்து 3,585 ஆக குறைந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 470 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 242 ஆண்கள் மற்றும் 227 பெண்கள் அடங்குவார்கள்.
அதிகபட்சமாக சென்னையில் 782 பேருக்கும்,கோவையில் 464 பேருக்கும், செங்கல்பட்டில் 248 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஒருவர் உள்பட மொத்தம் 35 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 525 பேர் குணம் அடைந்தனர். இன்று ஒருவர் கூட கொரோனா தொற்றால் மரணமடையாது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post