பிரதமர் மோடியை விளாசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை..!!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வ பெருந்தகை தேர்தல் பத்திர விவகாரங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரங்களை யார் யாருக்கு கொடுத்துள்ளது என்ற தகவலை வெளியிட வேண்டும்.
விஞ்சான ரீதியாக ஊழல் செய்து வருவது பாஜக மட்டுமே, அவர்கள் செய்யும் ஊழல் மக்களுக்கு தெரிந்து விடும் என்ற பயத்தில் தான். ED, IT வைத்து மிரட்டி அதன் மூலம் வரும் பணம் மற்றும் தேர்தல் பத்திரங்களை வைத்து மோசடி செய்து வருகின்றனர்.
புல்வாமா தாக்குதலில் 40 இராணுவ வீரர்களைக் கொல்லப்பட்டனர். பாஜக பாகிஸ்தான் நாட்டில் ஒரு நிறுவனம் மூலம் இருந்து நிதி வாங்கி உள்ளனர். இந்திய நாட்டை அச்சுறுத்தும் அந்நிய நாட்டில் இருந்து நிதியை பாஜக பெற்றுள்ளது. எதற்காக இந்த நிதி கொடுக்கப்பட்டது..? இவை அனைத்திற்கும் பிரதமர் மோடி, மற்றும் அண்ணாமலை பதில் அளிக்கவேண்டும்.
காங்கிரஸ் யாரிடம் தேர்தல் பத்திரங்கள் வாங்கியது என்பதை நாங்கள் வெளியிடுகிறோம். நாட்டிற்கு விடுதலை வாங்கி கொடுத்த கட்சி என்பதால் காங்கிரஸ் எங்களுக்கு மனம் உவந்து தேர்தல் பத்திரங்களை கொடுக்கின்றனர். நாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதால் பயப்படவில்லை.ராகுல் காந்தியின் இறுதி யாத்திரையில் தமிழ்நாடு முதலமைச்சரும் பங்கேற்க உள்ளார்.
பாஜக பயப்படவில்லை என்றால் அவர்கள் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரத்தை வெளியிட வேண்டும். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதன் காரணம் அனைவருக்கும் தெரியும். என செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.