ஒரே நாளில் இவ்வளவு பணம் வசூலா..? இன்னைக்கு எங்கே எவ்வளவு தெரியுமா..?
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டதில் பல்வேறு மாவட்டங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் அஸ்தினாபுரம் அருகே உரியஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 1,40,000 ரூபாயை பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரிஸ்வர்ணாவிடம் ஒப்படைக்கப்பட்டது
அதைபோல் வேலூர் மாவட்டத்தில் சையத் அக்பர்பாஷா என்பவர் கொண்டு வந்த 2லட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அலுமேலு ரங்காபுரம் பகுதியில் விஜயன் என்பவரிடம் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 2லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து வேலூர் வட்டாட்ச்சியர் கவிதாவிடம் ஒப்படைத்தனர்.
அதனை தொடர்ந்து பொன்னை அருகே ஆந்திராவை சேர்ந்த கரன் குமார் என்பவரிடம் 5லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.
அதைபோல் தருமபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட 6 லட்சத்து 94 ஆயிரம் ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்டாட்சியர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.
மற்றும் திருப்பூர் டி.கே.டி மில் அருகில் உள்ள சோதனை சாவடியில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 3 லட்சத்து 33 ஆயிரத்து 500ரூபாய் பணத்தை இன்சூரன்ஸ் ஏஜென்டிடம் இருந்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் 21 லட்சத்து 70 ஆயிரத்து, 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.