தார் சாலை ஆக்கிரமிப்பு..!! அதிர்ச்சியில் பொதுமக்கள் சாலை மறியல்…
திருவண்ணாமலையில் தனியார் திருமண மண்டபத்திற்காக தார் சாலையை ஆக்கிரமித்து சுற்று சுவர் வைத்ததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலையில் இருந்து சென்ன, சமுத்திரம், வலையாம்பட்டு தீத்தாண்டப்பட்டு உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் கிராம தார் சாலையை ஆக்கிரமித்து தனியார் திருமணம் மண்டபம் உரிமையாளர் சுற்றுச்சுவர் எழுப்புவதை கண்டித்து, பொதுமக்கள் திருவண்ணாமலை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தனியார் மண்டப உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.