முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டம்..! போடப்பட்ட அடுத்த உத்தரவு…!
காலை உணவு திட்டம் ஊரக பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என 14 மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல் நாளான இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஜூன் 24 சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்க உள்ள திட்டங்கள் குறித்தும் தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டங்களின் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம் , மாவட்ட வாரியாக நடைபெற்ற பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் முக்கியமான ஆண்டுகள் எனவும் நலப்பணிகளை சிறப்பாக செய்ய வேண்டியது நமது கடமை எனவும் தெரிவித்தார்
வருவாய்த் துறையில் பட்டா வழங்குதல், சான்றிதழ்களை பெறுவதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்திய முதலமைச்சர் தமிழ்ப்புதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்
மேலும் தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருந்தாலும், அது போதாது. போதை பொருள் புழக்கம் சட்டம், ஒழுங்கு மட்டுமல்லாது சமூக பிரச்சினையாக உள்ளதாகவும் அதை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, கட்டமைப்பு மேம்பாடு, அரசு சேவைகள், வேலை வாய்ப்புகள் என மக்களுக்கு கிடைக்க வேண்டிய சேவைகள் அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..