திருவண்ணாமலை அருகே சரக்கு லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு காலி பாட்டில் ஏற்றி வந்த சரக்கு லாரி நேற்று இரவு திருவண்ணாமலை அடுத்த கோளாப்பாடி கிராம்ம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது..,
சாத்தனூரை சேர்ந்த காமாட்சி தனது மகன் சக்திவேலுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துவிட்டு நேற்று இரவு காரில் சாத்தனூருக்கு திரும்பியுள்ளனர்.
அப்போது எதிரே வந்த சரக்கு லாரி காரின் மீது நேருக்கு நேர் மோதியிடத்தில் கார் டிரைவர் இளையராஜா, காமாட்சி, சக்திவேல் ஆகியோர் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் கோவையைச் சேர்ந்த சரக்கு லாரி டிரைவர் ஐயப்பனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.