3 துண்டுகளாக உடைந்த சிறுவனின் எலும்பு.. காவல்துறை அராஜகம்.. நீதிமன்றம் அதிரடி..!
திருச்சியைச் சேர்ந்த விஜயா என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2016ல் தனது மகன் பிரசாந்திற்கு 16 வயதாக இருந்த போது டீக்கடையில் தன் மகன் டீ குடித்துக் கொண்டிருந்தான்.
அந்த சமயத்தில் எந்தக் காரணமும் இல்லாமல் பொன்மலை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் ஒருவர் பிரசாந்தை லத்தியால் தாக்கியதில் தனது மகனின் கால் எலும்பு 3 துண்டுகளாக உடைந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் மகனுக்கு சிகிச்சைக்காக பல லட்ச ரூபாய் செலவான நிலையில் 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் மகனுக்கு இழப்பீடு வழங்குவது தான் நீதி என்று தெரிவித்த நீதிபதி 3 லட்ச ரூபாயை இழப்பீடாக மனுதாரர் தரப்புக்கு 2 மாதங்களில் வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
-பவானி கார்த்திக்