மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணத்தை காண 5,793 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
திருக்கல்யாண வைபவம்:
மதுரை சித்திரை திருவிழா ஏப்.23 ல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம். இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணத்தை காண பக்தர்களுக்கு ரூ.200, ரூ.500 டிக்கெட்டுகள் முன்பதிவு நடந்தது.
தெற்கு கோபுர வாசல் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த கட்ட ணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதிகோவில் இணையதளத்தில் maduraimeenakshi.hrce.tn.gov.in மற்றும் இந்து சமய அறநிலை யத்துறை இணையதளமான hrce.tn.gov.in ஆகியவற்றில் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.
பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதி வர வேற்பு அறையில் மேற்படி நாட்களில் நேரடியாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டது.
முன்பதிவு செய்ய கடைசி நாள்:
நேற்று இரவு வரை 500 ரூபாய் டிக்கெட்டில் 3,917 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 1876 பேர் என மொத்தம் 5,793 பேர்முன்பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்த விண்ணப்பங்களுக்கு இன்று குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
அவ்வாறு உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் கிடைக்க பெற் றவர்கள் நாளை முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் 12-ந் தேதி மாலை 5 மணி முடிய பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் காண்பித்து பணம் செலுத்தி உரிய நுழைவு கட்டண டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலா
Chithirai Festival 2023
ம்.
வெளியூரில் வசிப்பவர்கள் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.