நடிகர் பாபி சிம்ஹா மீது அவரது நண்பர் புகார் அளித்துள்ளதாக பத்திரிக்கையாளரிடம் பேட்டியளித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடிகர் பாபி சிம்ஹாவின் நண்பர் உசைன் என்பவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில் தானும் பாபி சிம்ஹாவும் பள்ளி பருவ நண்பர்கள் எனவும் கட்டிட ஒப்பந்ததாரரான தனது உறவினரை நடிகர் பாபி சின்ஹாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும்,
அதன்படி கொடைக்கானல் பேத்துப்பாறை ஊராட்சியில் உள்ள நடிகர் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பங்களா கட்டுவதற்கு ஒரு கோடியே ஐம்பது லட்ச ரூபாயில் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதன்படி வீடு கட்டி முடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இதில் தனது உறவினருக்கும் நண்பருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் ஆகையால் அவருக்கு ஒப்பந்த தொகையில் பாதி வழங்கவில்லை எனவும் இதைக் குறித்து நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். ஆனால் தனது நண்பரான பாபி சிம்ஹா தன் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி தான் மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்துள்ளார். அதன்படி தான் அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்
ஆனால் பாபி சின்ஹா தற்போதைய கட்டிய பங்களாவில் விதி மீறி கட்டப்பட்டு இருப்பதாகவும் அதில் அனுமதி இல்லாமல் மலைப்பகுதிக்கு ஜேசிபி இயந்திரம் வெடி மருந்து போன்றவை கொண்டு செல்லப்பட்டதாகும் அதற்கான ஆதாரமாக புகைப்படங்களை காண்பித்தார் மேலும் பாபி சின்ஹா மீது வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார்.