கேரளா ஸ்டோரி படம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை நீங்கள் ஐஎஸ் இயக்கத்தோடு தொடர்புடையவரா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
சென்னை அடையாறில் உள்ள இசை கல்லூரியில் இயங்கக்கூடிய திரையரங்கத்தில் கேரளா ஸ்டோரி படம் திரையிடப்பட்டது இதனை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பார்த்தார்
அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கேரளா ஸ்டோரி என்ற படத்தை ஒவ்வொரு இந்து பெண் குழந்தைகளும் கிறிஸ்தவ பெண் குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டும் எனவும் இந்தியாவில் நடந்த ஆக்கபூர்வமான விஷயத்தை இந்தப் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படத்தின் கருத்து உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்
மேலும் பேசிய அவர் பல்வேறு வெளிநாடுகளில் நடக்கும் காட்சிகள் நம் பார்த்துக் கொண்டுதான் இருக்கும் ஐ எஸ் ஐ எஸ் என்ற தீவிரவாத அமைப்பு ஷியா முஸ்லிம்களையும் ஏற்றுக்கொள்ளாமல் அவர்களையும் படுகொலை செய்து வருவதாகவும், இந்த படத்தில் எவ்வாறு படிக்கும் பெண்களை காதல் வலையில் விழுத்தி ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பது தெளிவாக காட்டியுள்ளதாகவும்
இந்திய பெண்களை எவ்வாறு வெளிநாட்டிற்கு கடத்தி செல்கிறார்கள் என்பதை இந்தப் படத்தின் காட்சிகள் உணர்த்துவதாகவும்
தொடர்ந்து பல்வேறு படங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்ததாகவும் தற்போது ஐஎஸ் இயக்கத்தின் கொடூர குணத்தை பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு திருமாவளவனம் சீமானும் ஆதரவு தெரிவிப்பதாகவும் தேசிய குற்ற ஆவணத்தில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் காணவில்லை என்று ஆவண காப்பக வெளியேற்றுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டது பற்றி செய்தியாளர்களுக்கு கேள்விக்கு செய்தியாளர்களைப் பார்த்து நீங்கள் ஐஎஸ் இயக்கத்தோடு தொடர்புடையவரா என எச் ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்
ஒன்றியம் என்று பேசினாலே பிரிவினைவாதம் என்று பொருள் பொதுக்கூட்டம் ஒன்றில் நீர்வளத்துறை அமைச்சர் ஆளுநரை கடுமையாக சாடினார் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் புழுவை விட மோசமான கேவலமான நபர் என துரைமுருகனை கடுமையாக விமர்சித்தார்.
இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல அனைவரும் இந்த படத்தை பார்த்துவிட்டு விமர்சனங்களை சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்தார்.