எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏராளமான இளைஞர்கள் மதிமுகவில் உறுப்பினர்களாக இணைந்து வருவதாகவும் மதிமுக என்ற இயக்கம் புதிய பொலிவையும் வலிமையையும் பெற்று வருவதாக தெர்வித்தார்.
பாஜகவினர் ஒவ்வொரு அஜெண்டாக்களாக நிறைவேற்றி வருவதாக தெர்வித்த வைகோ பாஜக வளர்ச்சிக்கு ஏடுகளும் ஊடகங்களும் தான் பிரம்மாண்டமான வெளிச்சத்தை கொட்டுவதாக தெரிவித்தார்
புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் முடிவில் பாஜக இறங்கி இருப்பதாக தெர்வித்த வைகோ தமிழ்நாடு ஆளுநர் திருக்குறளையும் புறநானூறையும் பேசுவதன் மூலம் இங்கு யாரையும் ஏமாற்றிவிட முடியாது எனவும் தெரிவித்தார்
பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான அரசாக திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என வைகோ தெரிவித்தார்