பெற்ற தாயால் ஒரு மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்..!! கைது செய்யப்பட்ட பெண்..!!
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் விஜயாகார்டன் பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் வயது25. சத்யா வயது22 என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை மருத்துவமனையில் இருந்து சிலநாட்களுக்கு முன்பு தான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளளார்.
நேற்று பாடியநல்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவில் ரமேஷ் தீச்சட்டி எடுக்க சென்றபோது குழந்தையை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு சத்யாவும் கோவிலுக்கு சென்றுள்ளார். பின் வீட்டிற்கு வந்து குழந்தையை வாங்கிய சத்தியா வெளியே சென்று வருவதாக கூறி குழந்தை எடுத்து சென்றுள்ளார்.
பின் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சத்யா உறவினர்களிடம் குழந்தையை காணவில்லையென் தெரிவித்துள்ளார். பதறி அடித்த உறவினர்கள் குழந்தையை அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். குழந்தை எங்கு தேடியும் கிடைக்காததால். காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற காவலர்கள் குழந்தையை தேடிய போது சத்யா வீட்டின் அருகே உள்ள கிணற்றில் சடலாமாக மிதந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அனைவரும் குழந்தையை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அனால் குழந்தை ஏற்கனவே இருந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவல் துறையினர் குழந்தை கொலை செய்யபட்டிருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போதே பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
கொலையின் பிண்ணனி :
ரமேஷ் மற்றும் சத்யா காதலித்து திருமணம் செய்துக்கொண்டதால் குழந்தை பிறந்த பெண் சத்யாவிற்கு ரமேஷின் காதல் கிடைக்காமல் போய்விட்டதால் திட்டமிட்டு குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு எதுவும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார். பின் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக காவலர்கள் சத்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அந்த பெண்ணே வாக்குமூலம் அளித்திருப்பது குறிப்பிடதக்கது.