இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களை நாசம் செய்த மோச கும்பல்..! இன்ஸ்டா பெண்களே உஷார்..!!
கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் இளம் பெண்களை வலையில் வீழ்த்தி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறித்த கன்னியாகுமரி காசி போன்று வலம் வந்த வினித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவனந்தபுரம் அருகே கிளிமானூர் பகுதியை சேர்ந்த வினீத் என்ற மீசை வினீத் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி.., இன்ஸ்டாவில் பாஃளோ செய்யும் பெண்களிடம் பேசி.., காதலிப்பதாக கூறி பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அதில் ஒரு பெண்ணிடம் இதே காதல் வார்த்தையை கூறி ஆறு சவரன் தங்க நகையை வாங்கி அடகு வைத்து.., மது என அனுபவித்துள்ளார். அதை அந்த ஏமார்ந்த பெண் கேட்டதற்கு.. அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற கிளிமானூர் போலீசார்.., வினீத்தை கைது செய்துள்ளனர்,. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருந்த நிலையில். மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.