பின்வாங்கிய சந்திரபாபு நாயுடு.. தெலங்கானா சட்டசபை தேர்தலில்.. இந்த கட்சிக்கு ஆதரவா..?
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு சிறையில் உள்ளதால் தெலங்கனா சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில் இருப்பதால் தேர்தலில் இருந்து விலகுவதாக.., மேலும் அந்த கட்சி பாஜகவுக்கு ஆதரவு கொடுக்க போவதாகவும் அந்த கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்…
தெலங்கானா மாநிலத்தில் தற்போது பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சந்திரசேகரராவ் உள்ளார். இந்நிலையில் தான் தெலங்கானா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் முடிய போகிறது… இந்த சமயம் அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த மாதம் நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக மாநிலத்தில் உள்ள 119 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் பதிவாகும் ஓட்டுகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.. தெலங்கானாவை பொறுத்தவரை ஒரு கட்சி ஆட்சியை செய்ய வேண்டும் என்றால் 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயம்…
ஆந்திராவில் 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலங்கானா புதிய மாநிலமாக உருவானது அந்த ஆண்டு முதல் அங்கு பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி தான் நடக்கிறது. ஆந்திராவின் முதல்வராக சந்திரசேகர ராவ் ஆட்சி செய்து வருகிறார்.
கடந்த 2014 சட்டசபை தேர்தல், 2018 சட்டசபை தேர்தல்களில் அவரது கட்சி வெற்றி பெற்ற நிலையில் வருகிற தேர்தலிலும் வாகை சூடி ஹாட்ரிக் சாதனை படைக்கும் என சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முறை காங்கிரஸ் கட்சி கடும் போட்டியை கொடுக்கும் என சொல்லப்படுகிறது.
மேலும் பாஜக கட்சி தெலங்கனாவில் போட்டியிட்டாலும் கூட நேரடி போட்டி என்பது பிஆர்எஸ் காங்கிரஸ் கட்சிக்கு இடையே தான் இருக்கும் என தெரிவித்துள்ளது… இதற்கிடையே தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியுள்ளது.
இதுகுறித்த அறிக்கையை தெலங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான கசானி ஞானேஸ்வர் அறிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் தற்போது கைதாகி இருக்கும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் தான் கசானி ஞானேஸ்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்…
சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த அவர் தெலங்கானா சட்டசபை தேர்தல் பற்றி என்ன முடிவு செய்திருக்கிறார் என கேட்க,
அதற்கு சந்திரபாபு நாயுடு தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து விலக போவதாக தெரிவித்துள்ளார்.., இதுபற்றி தெலங்கனாாவின் தெலங்கு தேசம் கட்சியின் தலைவரான கசானி ஞானேஸ்வர் கூறுகையில், ‛‛தெலங்கானா சட்டசபை தேர்தலில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகி இருக்கும். வரும் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்கள் யாரும் எந்த தொகுதியிலும் நிர்க்கப்போவதில்லை என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவிற்கு தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆந்திராவில் செல்வாக்கு அதிகம் ஆனால் தெலங்கானாவில் ஆந்திராவை போல் செல்வாக்கு இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்…
ஒருவேளை பாஜக ஆதரவு கேட்கும்பட்சத்தில் இருகட்சிகளும் பாசிட்டிவ்வான பதில் அளிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிட்டு வெற்றி பெறலாம் என அவர் கூறினார்…