அருணாச்சல பிரேதேசத்தின் தேர்தல் தேதி வெளியீடு..!!
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19- ஆம் தேதி முதல் ஜூன் 1- ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என ஜூன் 4-ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதி என வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
இதையடுத்து, அருணாசல பிரதேசம், சிக்கிமில் 2 நாட்கள் முன்பே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் குறித்து ஊடகங்கள் வழியாக 3 முறை மக்களுக்கு தகவல் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதில் முக்கிய குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் குறித்து மக்களுக்கு விரிவான தகவல்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தேர்தல் பிரசார காலத்தில் 3 முறை செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது
அதைப்போல வேட்பாளரை களமிறக்கும் அரசியல் கட்சிகளும் அவர்களது குற்றப்பின்னணி விவரங்களை இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள், வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.