கலைஞரின் பேனா சிலையை சீமான் உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் அருள்மிகு கங்காதரரேஸ்வரர் திருக்கோவிலில் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து, ராஜகோபுரம் , சுற்றுப்பிரகாரம் , கருங்கல் பாதிக்கும் பணிகள், மின் பணிகள் , நந்தவனம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,
கோயில் கும்பாபிஷேகத்திற்கு உண்டான திருப்பணிகள் அடுத்த எட்டு மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என கூறினார்.
மேலும், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு பிறகு திருக்கோவிலுக்கு உபயதாரர்கள் மூலமாக 600 கோடி ரூபாய் வரை நன்கொடை கிடைத்துள்ளதாக கூறினார்.
இதை தொடர்ந்து சீமான் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சீமான் கலைஞரின் பேனா சிலையை உடைக்கும் வரை எங்கள் கைகள் பூப்பறித்துக் கொண்டிருக்குமா ?எல்லோருக்கும் கைகள் இருக்கு. இந்த பதிலே அவருக்கு போதும் என்றார்.