கலைஞர் 100 ரூபாய் நாணயம்..! ஒன்றிய அரசு எடுத்த முடிவு..!
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த ரூ.100 சிறப்பு நாணயத்தை ஒன்றிய அரசு வெளியிடுகிறது.
கலைஞர் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி 100ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 100 ரூபாய் சிறப்பு நாணயத்தில் கலைஞர் உருவப்படத்துக்கு கீழ் அவரது கையொப்பமும் இடம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் “முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி” என்ற பெயரில் அந்த 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் “தமிழ் வெல்லும்” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
அதற்கான உத்தரவை ஒன்றிய அரசு விரைவில் கெஜட்டில் வெளியிடவுள்ளது. அதற்கான மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு தற்போது வழங்கியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் “டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி” என்ற பெயருடன், “தமிழ் வெல்லும்” என்ற வாசகம் அவரது நினைவு நாணயத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையொட்டி 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணையையும் ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிட்டுள்ளது. நாணையத்தின் ஒரு புறம் “முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024” என அச்சிடப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் 100 என நாணயத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..