ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. நெல்சன் மனைவிக்கு வந்து கொலை மிரட்டல்..!!
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
இந்த கொலை தொடர்பாக ரவுடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பென்னை பாலு உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் 8 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து ஆற்காடு சுரேஷின் மனைவி ஆந்திரவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மேலும் தொடர்புடைய பிரபல ரவுடி சம்போ செந்தில் மற்றும் சீசிங்ராஜா ஆகியோரை செம்பியம் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் சம்போ செந்தில் மற்றும் சீசிங்ராஜா ஆகியோருடன் தொடர்பில் இருந்த சிவா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் வழக்கறிஞர் சிவா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து மற்றொரு ரவுடியான மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்பும், வெளிநாடு செல்தற்கு முன்பு யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை குறித்த பட்டியலை காவல் துறையினர் தயாரித்தனர்.
அதில் திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் உடன் அடிக்கடி தொலைப்பேசியில் உரையாடி வந்தது தெரியவந்தது.
பின்னர் மோனிஷாவிடன் இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரித்த போது , “தான் வழக்கு ஒன்று தொடர்பாக வழக்கறிஞர் கிருஷ்ணனுடன் தொடர்ந்து பேசி வந்ததாக” விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவருக்கு அடைக்கலம் கொடுத்திருக்காலம் என்று சந்தேகமடைந்த போலீசார் அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரிடமும் விசாரணை நடத்தவிருப்பதாகவும் அதற்கான சம்மனை காவல் துறையினர் கொடுத்திருப்பதாகவும் தெரிகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திரைப்பட இயக்குநர் நெல்சன் மற்றும் அவரது மனைவி சம்மந்தபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்