“நல்லா இருக்கீங்களா தலைவரே…” கோவை மக்களின் அன்பு..!
தமிழக முதலைமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அப்படி செய்யப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட பணிகளானது மக்களுக்கு கிடைக்கிறதா..? மேலும் ஏதேனும் குறைகள் இருக்கிறதா என ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று கள ஆய்வு செய்து வருகிறார்.
அதன் படி இன்று சென்னை விமானநிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர் காலை 11 மணியளவில் சென்னை வந்தடைந்தார்.. அங்கு விமான நிலையத்திலேயே மக்களை சந்தித்து நலம் விசாரித்தார்..
அதன் பின்னர் எல்காட் நிறுவனம் சார்பில் 114.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பின்னர் 8 தளங்களுடன் 3.94 ஏக்கர் பரப்பளவில் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தையும் அவர் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து பீளமேட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில்., விடுவிப்பு அளிக்காமல் இருந்த நில உரிமையாளர்களுக்கு நில விடுவிப்பு அளிக்க உத்தரவிட்டார்.
அதன் பின்னர் மக்களை சந்தித்து குறைகளை கேட்பதற்காக வாகனத்தில் சென்ற வரை மக்கள் “நல்லா இருக்கீங்களா தலைவரே…” எனக் கோவை விமான நிலையம் முதல் ELCOT வரையில் திரண்டிருந்த மக்கள் வரவேற்பு அளித்தனர்., தொடர்ந்து 4 கிலோ மீட்டர் வரை மக்கள் சூழ்ந்து முதலமைச்சரை சந்தித்துள்ளனர்.,
https://twitter.com/i/status/1853715434895274419
மேலும் அந்த பகுதியை கடக்க சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலானதாகவும் இது தான் கோவை மக்களின் அன்பு எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்…