திருவண்ணாமலை தீபத்திருவிழா பக்தர்களுக்கு அனுமதி உண்டா…? அமைச்சர் சேகர் பாபு அளித்த விளக்கம்…!!
திருவண்ணாமலை தீபத்திருவிழா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஆண்டு தோறும் திருவண்ணாமலையில் தீபத்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது., அந்த வகையில் இந்த ஆண்டு பெஞ்சல் புயல் எதிரொலியால் அங்கு மண் சரிவு ஏற்பட்டு., பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பெஞ்சல் புயல் துணை சபாநாயகர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். பெஞ்சல் புயல் பாதிப்பிற்கு பின் திருவண்ணாமலை கிரிவலம் மலைப்பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுநர்கள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் தீபத் திருநாளில் மலையேறி சென்று தீபத்தை காண அனுமதிப்பது குறித்து வல்லுநர் குழு ஆய்வறிக்கை கிடைத்தவுடன், முதலமைச்சர் உடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று பதில் அளித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..