அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 21-ம் தேதி மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2024-25 ஆம் கல்வியாண்டிற்கான, இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான MBBS மற்றும் CBSE மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் இன்று காலை 10 மணிமுதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வு நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்கும் என தெரிவித்தார்.